-
பாடசாலை 07.30 மணிக்கு ஆரம்பமாவதால் மாணவர்கள் அனைவரும் 7.25 மணிக்கு முன்னதாக வருகை தருதல் வேண்டும்.
-
பாடசாலையில் பிரவேசிக்கும் போதும்.வெளியேறும் போதும் பிரதான வாயிலையே பயன்படுத்துதல் வேண்டும்.
-
பாடசாலைக்கு வரும் பொழுது இடதுபக்க வீதியோரமாக. இரண்டு இரண்டு மாணவர்களாகவே வருகை தருதல் வேண்டும். (குறிப்பு : குழுவாகவருவதைத் தவிர்த்துக்கொள்ளவும்).
-
மாணவர்கள் தங்களது துவிச்சக்கர வண்டிகளை (bicycle) ஒதுக்கப்பட்ட இடங்களில் முறையாக வைத்தல் வேண்டும். (குறிப்பாக பாடசாலை வளாகத்தை தவிர்ந்த ஏனைய இடங்களில் வைப்பதை முற்றாகத் தவிர்க்கவும்)
-
வாடகை வாகனங்களில் (Auto. Van) வரும் மாணவர்கள் வரும்போதும், பாடசாலையில் இருந்து வீடுசெல்லும் போதும் உரிய நடைமுறைகளை வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
-
மாணவர்களின் நலன் கருதிவாகன ஓட்டுநர்களது பெயர்,முகவரி, தொலைபேசி இலக்கம், வாகன இலக்கம் போன்றவைகளை பாடசாலைக்கு பெற்றார் மூலம் அறியத்தருதல் வேண்டும்.
-
பாடசாலை முடிந்து வீடு செல்வதற்கான அலாரம் அடித்ததன் பின்னர் மாணவர்கள் வகுப்பு ரீதியாகவும்,நேர்த்தியாகவும் வரிசையாகவும் (Line) செல்லுதல் வேண்டும்.
-
பாடசாலை விட்டுச் செல்லும் பொழுதும் இடது பக்க வீதியோரமாக, இரண்டு இரண்டு மாணவர்களாகவே செல்ல வேண்டும். (குறிப்பு:குழுவாக செல்வதைத் தவிர்த்துக் கொள்ளவும்).
-
பாடசாலை முடிந்தவுடன் வேறு எங்கேயும் செல்லாமல் வீட்டுக்கே செல்ல வேண்டும்.
-
அனுமதிக்கப்பட்ட பாடசாலை சீருடையுடன் வருகை தருதல் வேண்டும்.
-
முஸ்லிம் ஆண்கள் அனைவரும் தொப்பி அணிதல் வேண்டும்.
-
ஆண் மாணவர்கள் அனைவரும் கறுப்பு நிற சூ (Shoe) மற்றும் டை (Tie) அணிந்து வருவதோடு பெண் மாணவிகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உடையுடன் வெள்ளை நிற சூ (Shoe) அணிந்து வருதல் வேண்டும்.
-
டவுசர் (Trouser) தொப்பி, டை (Tie) அணியும் பொழுது ஒழுக்க விழுமியங்களுக்கமைய அணிதல் வேண்டும்.
-
காரணம் இன்றி பாடசலை நேரத்தில் சூ (Shoe) மற்றும் டை (Tie) இல்லாமல் இருத்தல் முற்றாக தடுக்கப்பட்டுள்ளது.
-
மாணவர்களின் ஒழுக்கத்தை பேணுகின்ற வகையில் தலைமுடிகள் வெட்டப் பட்டிருத்தல் வேண்டும். (குறிப்பு : தலைமுடிகள் சரிவர வெட்டாது வரும் மாணவர்களது தலை முடி பாடசாலையில் வைத்து வெட்டப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.)
-
பாடசாலை நேரத்தில் ஏனைய ஆபரணங்கள் அணிதல் முற்றாக தடுக்கப்பட்டுள்ளது. (குறிப்பு : மாணவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் பட்சத்தில். திருப்பியளிக்கப்படமாட்டாது)
-
அதிபர், ஆசிரியர்கள், பகுதித் தலைவர்கள், சிற்றூழியர்கள் ஆகியோரின் சொற்களுக்கு கீழ்ப்படிந்து நடத்தல்.
-
அதிபர்,ஆசிரியர்களிடம் எவ்வேளையிலும் உண்மை பேசுதல் வேண்டும்.
-
மாணவ தலைவர்கள், வகுப்புத் தலைவர்கள் தங்களுக்கென வழங்கப்பட்டுள்ள கடமைகளை சிறப்பாகச் செய்தல்.
-
வகுப்புத் தலைவர்கள், மாணவத் தலைவர்களின் சொற்களுக்கு கீழ்படிந்து நடத்தல்.
-
வகுப்பில் அமைதியைப் பேணுதல்.
-
பாடசாலையில் கையடக்க தொலைபேசி, சினிமா பட CD க்கள். மற்றும் சினிமா பத்திரிகை போன்ற ஆவணங்கள் கொண்டு வருவது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். (குறிப்பு : மாணவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் பட்சத்தில். திருப்பியளிக்கப்பட மாட்டாது)
-
ஆண் மாணவர்களும்,பெண் மாணவர்களும் இங்கு கல்வி கற்பதால் இருபாலாரும் ஒருவருக்கொருவர் கௌரவத்தை வழங்குவதோடு, அதற்கென விதிக்கப்பட்டுள்ள கட்டுக் கோப்புக்களையும் ஒழுங்குகளையும் பின்பற்றுதல் வேண்டும்.
-
பாடசாலை நேரத்தில் வகுப்புக்கு வெளியிலோ அல்லது பாடசாலைக்கு வெளியிலோ செல்ல வேண்டிய தேவைகள் ஏற்பட்டால் மாணவர்கள் ஒழுக்காற்று நடைமுறைகளைப் பின்பற்றி வெளியில் (பாடசாலைக்கு வெளியில்) செல்வதற்கான கொப்பியில் பதிந்தே செல்லுதல் வேண்டும்.
-
பாடசாலை நேரத்தில் தங்களது வகுப்பிலிருந்து வெளியில் (நூலகம், விவசாய கூடம், விஞ்ஞான கூடம்) செல்லவேண்டி ஏற்பட்டால் அனைவரும் வரிசையில் செல்லுதல் வேண்டும்.
-
இடைவேளை நேரத்தைத் தவிர மாணவர்கள் வெளியே வருதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
-
பாடசாலைக்கென ஒதுக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச் சாலையில் மாணவர்கள் சிற்றுண்டிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். (பாடசாலைக்கு வெளியில் சென்று சிற்றுண்டிகளை வாங்குதல் தண்டனைக்குரிய குற்றமாகும்).
-
அதிபர், ஆசிரியர்களினால் பாடம் சம்பந்தமான விடயங்கள். விளையாட்டு சம்பந்தமான விடயங்கள், ஏனைய இணைப்பாடவிதானம் சம்பந்தமான விடயங்களில் பணிக்கும் போது அவை முழுமையாக பின்பற்றப்படல் வேண்டும்.
-
மாணவர்களுக்கு நாளாந்தம் தரப்படும் பொறுப்புக்கள் உரிய நேரத்தில் செய்து முடிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
-
பாடங்களுக்கு ஆசிரியர்கள் வராத நேரங்களில் தங்களது பகுதிக்குரிய, பகுதித் தலைவரிடம் அதற்கான மாற்று ஒழுங்குகளை கேட்டறிந்து பாடங்கள் நடப்பதற்குரிய ஒழுங்குகளை வகுப்புத் தலைவர் செயற்படுத்த வேண்டும்.
-
பாடசலைச் சொத்துக்கள், உபகரணங்கள் போன்றவற்றைப் பாதுகாத்தல் அனைவரினதும் கடமையாகும். (குறிப்பு : சேதப்படுத்தல், களவு செய்தல் என்பன உறுதி செய்யப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அச் சொத்துக்களை, உபகரணங்களை பெற்றுத் தருதல் வேண்டும்)
-
பாடசலைச் சொத்துக்கள், உபகரணங்கள் போன்றவற்றை யாராவது சேதப் படுத்தினாலோ, களவு செய்தாலோ உடனடியாக அதனை உரிய ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
-
மாணவர்களது சுத்தம். தங்களது வகுப்புச் சுத்தம், சுற்றுப்புறச் சூழல் சுத்தம் என்பவைகளை தாங்களே உறுதி செய்துகொள்ளுதல் வேண்டும்.
-
மாணவர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள், வாய்த்தர்க்கங்கள், கைகலப்புகள் ஏற்பட்டால் உடனடியாக ஒழுக்காற்று ஆசிரியர்களுக்கு அறியத்தருதல் வேண்டும்.
-
பாடசாலைக்கு வருகை தரமுடியாத நாட்களை இந்த ஒழுக்காற்றுக் கொப்பியில் பதிந்து பெற்றார்/பாதுகாவலர் ஒப்பத்துடன் வருகை தருதல் வேண்டும்
-
மூன்று நாட்களுக்கு மேற்பட்ட தொடர் விடுமுறையில் இருந்த மாணவர்கள் அவசியம் பெற்றார்களுடனே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
-
பாடசாலைக்கு வருகை தராத மாணவர்கள் முதலாம் பாடம் தொடங்குவதற்கு முன்னதாக ஒழுக்காற்று ஆசிரியரின் அனுமதி பெற்று வகுப்பிற்கு செல்லுதல் வேண்டும்
-
பாடசாலைக்கு அனுமதி பெற்ற புதிய மாணவர்களை பகடிவதை செய்வது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
-
பாடசாலையினால் நடாத்தப்படும் பரீட்சைகள், போட்டி நிகழ்வுகளில் மாணவர்களுக்கென பணிக்கப்படும் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடத்தல்.
-
பாடசாலையால், அரச அலுவலகத்தினால், பொது நிறுவனங்களினால் நடாத்தப்படுகின்ற பொதுப் பரீட்சைகளில் எமதுபாடசாலையின் தனித்துவத்தை பேணும் வகையில் ஒழுங்காகவும், முறையாகவும் செயற்படுதல்.
-
விஷேடமாக பாடசாலை நிருவாகத்தினால் மாலை நேர வகுப்புக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டால் அவ் வகுப்புகளுக்கே
முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும். -
மாலை நேர வகுப்புகளுக்கு (பாடசாலையிலோ/வெளியிலோ) செல்லும் பொழுது உரிய நேரத்திற்கு செல்வதோடு, வகுப்பு முடிந்தவுடன் வீட்டுக்கே செல்லுதல் வேண்டும்.
-
மாலை நேர வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்கள் (ஆண்கள்) வீதியில் செல்லும் போது bicycle களை கோர்த்து குழுவாக செல்லாது தனித்தனியாக செல்லுதல் வேண்டும்.
-
மாலை நேர வகுப்புக்ளுக்குச் செல்லும் மாணவிகள் வீதியில் செல்லும் போது இவ்விரண்டு மாணவிகளாகவும் குறிப்பாக அமைதியாகவும் செல்லுதல் வேண்டும்.
-
மாலை நேர வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் தங்கள் bicycle களை பாதைகளில் போக்குவரத்துக்கு பாதிப்பில்லாத வகையில் ஒழுங்கு முறையாக வைத்தல் வேண்டும்.
-
பாடசாலை வளாகத்தினுள் விளையாடுதல் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.
-
பாடசாலைக் கழகங்கள் தவிர்ந்த ஏனைய கழகங்களில் அங்கத்துவம் வகித்தல் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
-
பாடசாலை ரீதியாக போட்டியாளர்கள், கழகங்கள் பங்கேற்கும் போது எமது பூரண ஒத்துழைப்பினை எமது பாடசாலை மாணவர்களுக்கே வழங்குதல் வேண்டும்.
-
மாலை 6.15 பின்னர் தொழுகை நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் மாணவர்கள் வீதிகள், கடைகளில் சுற்றித் திரிவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
-
பெற்றோர்களின் அனுமதியின்றி கடைகளில் மாணவர்கள் சாப்பிடுவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளவும்.
-
பள்ளிவாயல்களில் தொழுகை நேரம், ஜூம்மா நேரங்களில் கதைத்தல், ஸலாம் கொடுத்தவுடன் ஓடுதல், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தல் போன்றன தண்டனைக்குரிய குற்றச் செயல்களாகும்.
-
பாடசாலையின் பொதுவான நிகழ்வுகளில் மாணவர்கள் அனைவரும் கலந்துசிறப்பித்தல் வேண்டும்.
-
பொது இடங்களில் அல்லது ஏனைய பாடசாலைகளில் எமது பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து சிறப்பித்தால் அத்தருணம் எமது பாடசாலையின் கௌரவம், நன்மதிப்பு போன்றவைகளை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் வேண்டும்.
- Home
- பள்ளி பற்றி
- விதிகள்