அல்தாஜ் மகாவித்தியாலயம் வரலாற்றுச் சுருக்கம்
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் 59 ஜின்னா நகர் பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள தற்போதைய அல்தாஜ் மகா வித்யாலயம் 1959.09.11 திகதி ஜனாப் எஸ் எஸ் மொஹமட் தலைமையில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இங்கு முதலில் மொத்த மாணவர்களாக 90 பேர் காணப்பட்டனர் மேலும் 12 ஆசிரியர்களை கொண்டதாக பாடசாலை ஆரம்ப நிலை காணப்பட்டது.முதலில் தரம் ஐந்து வரையான வகுப்புகள் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மூன்று கட்டடங்கள் மாத்திரம் காணப்பட்டது. போதிய அளவு தளபாட வசதிகள் காணப்படாதது பெரும் குறையாக காணப்பட்டது.பாடசாலைக்கான வளாகம் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிலமாக காணப்படுகின்றது வெளி நபர்கள் சிலரின் உதவிகள் பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.அடுத்த கட்டமாக தரம் ஆறு வகுப்புகள் 1970 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கா.பொ.ம்.த. சாதாரண வகுப்பு 1975 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்டது. தற்போதைய அதிபரின் முயற்சியினால் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது உயர்தர ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மாணவர்கள் பல்கலைக்கழகங்கள் செல்கின்ற நிலை காணப்படுகின்றது.59 ஜின்னா நகர் பிரதேசத்தில் காணப்படும் ஒரே ஒரு உயர்தர பாடசாலையாக இப்பாடசாலை காணப்படுகிறது. கூடுதலான விளையாட்டு சாதனைகள் மற்றும் கல்வி செயற்பாடுகளில் முன்னோக்கி செல்லக்கூடிய ஒரு பாடசாலையாக இது காணப்படுகிறது. இவ்வாறு பல விடயங்களை உள்ளடக்கியதாக பாடசாலை வரலாறு காணப்படுகிறது. மேலும் பல சாதனைகளை தந்து இப்பிரதேசத்திற்கு ஒரு சிறந்த பாடசாலையாக செயல்படும்.